Saturday, September 8, 2012

புதிய பறவை பறந்ததே - தென்றல் வரும் தெரு

பாடல்: புதிய பறவை பறந்ததே
திரைப்படம்: தென்றல் வரும் தெரு
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
 
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ

காலடி சத்தம் தந்ததே நெஞ்சினில் முத்தம்
கொற்கையின் முத்து கொஞ்சுதே கிண்கிணி கொத்து
தேவதை என்று பாராட்ட சிந்தமிழ் சங்கம் கூடியதோ
காதலன் பேரை தாலாட்ட காவடிசிந்து பாடியதோ
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்...தா...ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ

வைகையின் ஓரம் மன்னவா நீ வரும் நேரம்
என்ன உன் கண்கள் நொந்ததே பங்குனி திங்கள்
ஜென்மங்கள் ஏழும் போதாது தேவனின் மார்பில் பூ தொடுக்க
தேகமும் ஒன்று போதாது தேவனின் கைகள் தேன் எடுக்க
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்...தா...ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ
 

No comments: