Thursday, October 10, 2013

மலர்களிலே ஆராதனை - கரும்புவில்

பாடல்: மலர்களிலே ஆராதனை
திரைப்படம்: கரும்புவில்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே ஆராதனை

பொங்கும் தாபம் பூம்புனல் வேகம் போதையில் வாடுது
அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது
மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ
மலர்க்கணை தொடுக்காதோ...மலர்களிலே ஆராதனை

பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேதம் படித்திடக்கூறுது
பாவை எண்ணம் பனிவிழும் நேரம் தலைனைச்சேருது
ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனை முடியாதது...மலர்களிலே ஆராதனை

மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே...ஆராதனை

No comments: