Saturday, September 8, 2012

சாதி மல்லிப்பூச்சரமே - அழகன்

பாடல்: சாதி மல்லிப்பூச்சரமே
திரைப்படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
சாதி மல்லிப்பூச்சரமே
சாதி மல்லிப்பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
சாதி மல்லிப்பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவறுக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகுபோல் உன் மனம் இருக்கக் கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப்போல் எல்லோரும் என எண்ணொணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்

சாதி மல்லிப்பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும் போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னத் சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனைச்சி பார்த்தோமா
படிச்சத நெனைச்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லிப்பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
 

No comments: