Friday, November 7, 2008

chinna pUngkiLi - paarvadhi ennai pAradi

பாடல்: சின்னப்பூங்கிளி
திரைப்படம்: பார்வதி என்னை பாரடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

ஆசைதீர பேசவேண்டும் பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே
உன்னைச்சேர ஏங்கும் மாது எல்லைக்கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச்சொல்லி தென்னங்கீற்று வேண்டாதா
வேண்டினால் விரல் தீண்டுமே தீண்டினால் சுகம் தோன்றுமே
தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

காலை மாலை கேட்பதுந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பதுந்தன் ஆராதனம்
உன்னைத்தீண்டும் கைகள் வேறு பெண்ணைத்தீண்டி வாழாது
சங்கப்பாடல் என்றும் இங்கே சந்தம் நீங்கிப்போகாது
காதலே ஒரு காவியம் நீண்டநாள் நிற்கும் ஓவியம்
கண்மணி என்னைக்கூடவா நாளெல்லாம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=

No comments: