Thursday, October 31, 2013

சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது

பாடல்: சம்சாரம் என்பது வீணை
திரைப்படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜய பாஸ்கர்


சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலந்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

விடுகதை ஒன்று - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடல்: விடுகதை ஒன்று
திரைப்படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.என்.சுரேந்தர் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


ஆரிராரிரோ...ஆரிராரிராரோ...ஆரிராரிராரோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யாரென்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளங்காற்றே மடல் வாழைக்கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்ததே உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் பாவம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆரிரோ...ஆராரோ ஆரிராரோ...ஆரிராரிரோ

Tuesday, October 22, 2013

சங்கீத மேகம் - உதயகீதம்

பாடல்: சங்கீத மேகம்
திரைப்படம்: உதயகீதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே...ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே...ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே...ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

பாடல்: அந்தரங்கம் யாவுமே
திரைப்படம்: ஆயிரம் நிலவே வா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...

காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது எப்பிடி எப்பிடி
கம்பனே வந்தால் கூட கட்டுப்படி ஆகாது எப்பிடி எப்பிடி
கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...ஹா
எப்பிடி...எப்பிடி எப்பிடி எப்பிடி எப்பிடி

காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம் எப்பிடி எப்பிடி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் எப்பிடி எப்பிடி
தாவணிப் பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
நீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

Thursday, October 17, 2013

பூவென்பதா பொன் என்பதா - உயிரே உனக்காக

பாடல்: பூவென்பதா பொன் என்பதா
திரைப்படம்: உயிரே உனக்காக
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாகவா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது...னன னன னன னன
னன னன ...னா னா னா னா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது...லல லல லல லல
லல லல...லா லா லா லா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா

பாடல்: ரோஜாவைத் தாலாட்டும்
திரைப்படம்: நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஆ
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று...தீண்டுதே மன்மத வண்டு
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்...கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கும் நூலாவேன் ஹா ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

Tuesday, October 15, 2013

அதிகாலை சுகவேளை - நட்பு

பாடல்: அதிகாலை சுகவேளை
திரைப்படம்: நட்பு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்கு பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்கு திறப்புவிழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
இதழ் ஓரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப் போகக்கூடாது

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

தென்றல் வந்து தீண்டினால்
இந்த தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன் உள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர் மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

Sunday, October 13, 2013

பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு

பாடல்: பூபாளம் இசைக்கும்
திரைப்படம்: தூறல் நின்னு போச்சு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
இசை: இளையராஜா


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னன னா னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் தேவை உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் தேவை உந்தன் தேவை அல்லவோ
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னன னா னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

Thursday, October 10, 2013

கண் மலர்களில் அழைப்பிதழ் - தைப்பொங்கல்

பாடல்: கண் மலர்களில் அழைப்பிதழ்
திரைப்படம்: தைப்பொங்கல்
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

நான் ஆளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ்ப்பாவோ
பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ
என்ன இன்று...ஆஹா
கண்ணில் என்னை வென்று...ஆஹா
கண்ணன் எண்ணுவதோ
எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ...மனங்களோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
லல லல லா

தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
ஆ...தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை
கண்ணில் என்ன...லாலா
மின்னல் கண்டபின்னும்...லாலா
இன்னும் மின்னுவதோ
உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ...மயக்கமோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
ல லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல

இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல
லல லல லல லல
ல லல லல லல லல
லல லல லல லல லா

மலர்களிலே ஆராதனை - கரும்புவில்

பாடல்: மலர்களிலே ஆராதனை
திரைப்படம்: கரும்புவில்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே ஆராதனை

பொங்கும் தாபம் பூம்புனல் வேகம் போதையில் வாடுது
அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது
மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ
மலர்க்கணை தொடுக்காதோ...மலர்களிலே ஆராதனை

பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேதம் படித்திடக்கூறுது
பாவை எண்ணம் பனிவிழும் நேரம் தலைனைச்சேருது
ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனை முடியாதது...மலர்களிலே ஆராதனை

மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே...ஆராதனை

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை

பாடல்: மயிலே மயிலே
திரைப்படம்: கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஜென்ஸி
இசை: இளையராஜா


மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க
பனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

Wednesday, October 9, 2013

என் அன்பே அன்பே - உன்னைத்தேடி வருவேன்

பாடல்: என் அன்பே அன்பே
திரைப்படம்: உன்னைத்தேடி வருவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே
உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்
தினமும் காதல்கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்
காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண
சந்திரோதயம் நீ ஆக சொர்க்காலயம் நான் காண
கண்ணா உன் கைவண்ணம் காணாத வைபோகம்
அன்பே உன் சிங்காரம் அழகான ஶ்ரீராகம்

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது
வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்
உன் மேலொரு கண்ணாக உன்னோடு நான் ஒண்ணாக
என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு
மெதுவாகத் தொட்டாலும் பதமாகப் பட்டாலும்
புதுமேனி நோகாதோ புண்ணாகிப் போகாதோ

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

தேடும் கண்பார்வை - மெல்லத் திறந்தது கதவு

பாடல்: தேடும் கண்பார்வை
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயம் ஆனதோ

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசைக் காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
கனிவாய்...மலரே
உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமும் உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்...இணைவோம்
இனி நீயும் நானும் வாழவேண்டும் வாசல் தேடிவா

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயம் ஆகுமோ
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

காவிரியே காவிரியே - அர்ச்சனைப் பூக்கள்

பாடல்: காவிரியே காவிரியே
திரைப்படம்: அர்ச்சனைப் பூக்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


லா ல ல ல் லா லா ல ல ல் லா
காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே...காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே

பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம்
என்னமோ...ம்ம் பண்ணுதே...ம்ம்
இந்த மன வேகம்
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே

காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே மல்லியப்பூ வாசம்
கையிலே...ஹா கையிலே...ம்ம்
கன்னிப்பொண்ணு பேசும்
புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

லா ல ல ல் லா லா ல ல ல் லா
லா லா லா ல ல லா ல ல லா

ஆனந்தத்தேன் சிந்தும் - மண் வாசனை

பாடல்: ஆனந்தத்தேன் சிந்தும்
திரைப்படம்: மண் வாசனை
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் தேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா

நீ நடந்து போகையிலே பூ நடந்து போகக்கண்டேன்
நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வழிந்து ஓடக்கண்டேன்
முத்தோ மணியோ எல்லாம் கவிதை
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
சொல்லித்தந்ததுந்தன் பார்வை அள்ளித்தந்ததுந்தன் ஜாடை
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா

நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து
பொன்னே பூவே எல்லாம் குறும்பு
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
அச்சம் தந்ததுந்தன் வேகம் வெட்கம் தந்ததுந்தன் மோகம்
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா

மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்மதுரை

பாடல்: மாசி மாசம் ஆளான பொண்ணு
திரைப்படம்: தர்மதுரை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & ஸ்வர்ணலதா
இசை: இளையராஜா


மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
பூவோடு ஆஆ ஆஆ ஆ தேனாட
தேனோடு ஓஓ ஓஓ ஓ நீ ஆடு
ஓஹோ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க
ஓ ஹோ ஹோ
ஹே ஆசை கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கி கிறங்க கிறங்கி உறங்க
ஓ ஹோ ஹோ
வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
கட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

காம லீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓ ஹோ ஹோ
ஹோய் ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
ஓ ஹோ ஹோ
கொடிதான் தவழுது தவழுது
பூபோல் சிரிக்குது சிரிக்குது
உறவோ நெருங்குது நெருக்குது
உலகம் மயங்குது உறங்குது
ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
பூவோடு ஆஆ ஆஆ ஆ தேனாட
தேனோடு ஓஓ ஓஓ ஓ நீ ஆடு
ஓஹோ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

Tuesday, October 8, 2013

முத்து ரதமோ முல்லைச் சரமோ - பொன்னகரம்

பாடல்: முத்து ரதமோ முல்லைச் சரமோ
திரைப்படம்: பொன்னகரம்
பாடியவர்கள்:பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


முத்து ரதமோ முல்லைச் சரமோ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ
இரவுக்காலம் நிலவுக்கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத்தேரில் உரிமைப்போரில்
என்னை இழுக்காதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு

வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினம் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி

பாடல்: மெட்டி ஒலி காற்றோடு
திரைப்படம்: மெட்டி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

ஏஏ ஏஏ ஏஏ ஏஏ ஏஏ ஏஏ
வெண்முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

எனக்கொரு காதலி இருக்கின்றாள் - முத்தான முத்தல்லவோ

பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
திரைப்படம்: முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை

ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி

பாடல்: ஆசைய காத்துல தூது விட்டு
திரைப்படம்: ஜானி
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா


ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தைமாசம் மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சோ பாடுது சோடிய தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையும் சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

தேனோ பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயிலைத்தோட்டத்து மானு
ஓடிவர உன்னைத் தேடிவர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

Monday, October 7, 2013

என்ன சுகமோ முதல் முதல் - வலம்புரி சங்கு

பாடல்: என்ன சுகமோ முதல் முதல்
திரைப்படம்: வலம்புரி சங்கு
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்


என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

பொருள் இழந்த வாசகம் அவளும் கொஞ்சம் பேசினாள்
இருள் பொதிந்த கூந்தலில் அவனும் தன்னை மூடினான்
மதன கலைக்கூடமே பெண்ணானதோ என்றானவன்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
பொன் மஞ்சம் எதற்கு என் நெஞ்சம் இருக்க
என்றாள் தந்தாள் நின்றாள் மயங்கி

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

பத்து விரல் ஓவியம் உடலில் எங்கும் தீட்டினான்
பருவமெனும் வீணையை இடையில் மெல்ல மீட்டினான்
பவளமலை மீதிலே பொன்னூஞ்சலில் நின்றாடினான்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
என்னென்ன தவிப்போ என்னென்ன சிலிர்ப்போ
அம்மா என்றாள் தன்னை இழந்தாள்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்