நீதானே என் பொன்வசந்தம் (2012)



பாடல்: சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
திரைப்படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா & ரம்யா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து
சாய்ந்து நீ பார்க்கும் போது

அடடா...ஹே ஹே

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா...ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா
...ஹே ஹே ஹே


விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா...வேறு என்ன பேச


சாய்ந்து
சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா...ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா...ஹே ஹே
ஹே...ஹே...ஹே

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்


ஹோ என் தந்தை தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உந்தன் மாக்கோலம்

அதை கேட்கும் எந்தன் வாசல்

காலம் வந்து வந்து கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே

முன் ஜென்மம் போவேனே
அங்கே...நீயும் நானும் நாம்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா...ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா...ஹே ஹே

கைவீசி காற்றில் நீ பேசும் அழகில்
மெய்யாகும் பொய்யும்


என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
ஏதேதோ செய்யும்


என் வீட்டில் வரும் உன் பாதம்

எந்நாளும் இது போதும்

ஹே இன்னும் இன்னும்

என்ன தொலை தூரத்தில்

ஆள் யாரும் பார்க்காமல்
தடயங்கள் இல்லாமல்
அன்பால்...உன்னை நானும் கொல்வேன்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா...ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா...ஹா

விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா...ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா...ஹே

*******************************************************

பாடல்: சற்று முன்பு பார்த்த மேகம்
திரைப்படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக


நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
ஓ ஹோ உன்னை பிடித்திட என்னை எரித்து நீ செல்

எல்லாமே பொய்யென்று சொல்வாயா...ஓ ஹோ ஹோ

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக


ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா
தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கிப் போன என் இதயத்தின் நிலைமை என்னடா

தேங்கிப் போன ஓர் நதியென இன்று நானடா
தாங்கிப் பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந் தனிக்காட்டில் எந்தன் காதல் வாட


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக


சேர்ந்துப் போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்துப் போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்துப் போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்துப் போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டுத் தொட்டுப் பேசும் உந்தன் கைகள் எங்கே


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
ஓ ஹோ உன்னை பிடித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய்யென்று சொல்வாயா...ஓ ஹோ ஹோ


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக

 

*******************************************************

பாடல்: என்னோடு வா வா என்று
திரைப்படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்: கார்த்திக்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்


நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்லச்சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய்
ஹா ஹா ஹா அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு...வா வா என்று
சொல்ல மாட்டேன்...போக மாட்டேன்


கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்கத் தானே
கண்ணை மூடி தூங்குவதைப் போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கத் தானே
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி
எந்நாளும் தீயாக பார்க்கதடி
சின்னப்பிள்ளை போல நீ

அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னைவிட யாரும் இல்லை

அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணிச்சொல்ல கேட்டுக்கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு...வா வா என்று
சொல்ல மாட்டேன்...போக மாட்டேன்


காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்னச் சின்ன தலை கணமே
காதல் அதை பொறுக்கணுமே
இல்லை எனில் கட்டிவைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையைத் தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தாலே வேண்டுமடி
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும்
என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்லச்சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய்
ஹா ஹா ஹா அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்


 *******************************************************

No comments: