Saturday, November 2, 2013

இரு மனம் கொண்ட - அவர்கள்

பாடல்: இரு மனம் கொண்ட
திரைப்படம்: அவர்கள்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & சதன்


ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்! யெஸ் பாஸ்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
நாணல்? மீ? ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியினில் சொந்தம் தேடுகின்றாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
இஃப் இட் இஸ் அபூர்வ ராகம்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ

பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
நோ இட்ஸ் பேட்...பட் ஐயாம் மேட்
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

ஹ ஹா ஹ ஹ ஹா ஹா ஹா
வாட்? கப கபா கப கபா ம்ம்?
ஜூனியர்! ம்ம்!

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
பாஸ்! லவ் ஹாஸ் சீஸன்! ஆர் ஈவன் ரீஸன்!
ஷட் உப்!

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனுக்கு ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
இட்ஸ் ஹைலி இடியாட்டிக்!
நோ பாஸ்! ஒன்லி ரொமாண்டிக்!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன்...மயங்குகிறாய்

No comments: