Friday, November 1, 2013

ஆழ்கடலில் தத்தளித்து - ராகம் தேடும் பல்லவி

பாடல்: ஆழ்கடலில் தத்தளித்து
திரைப்படம்: ராகம் தேடும் பல்லவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்


ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

காதல் மொழியைப் பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

மார்கழி மாதக் கோலமிட்டாள்
தண்ணீர் குடம் தூக்கி வந்தாள்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்
கதை மாறிடவே கரை வேறு கண்டாள்
கால அலைகளுடன் புது நதியைக்கொண்டாள் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக் கடலானேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

No comments: