Tuesday, November 5, 2013

அலை மீது தடுமாறுதே - அன்புள்ள மலரே

பாடல்: அலை மீது தடுமாறுதே
திரைப்படம்: அன்புள்ள மலரே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: இளையராஜா


அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

கண்ணில் இன்னும் சிந்தக்கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்ணை பெண்ணாய்க்காணும் காலம் இல்லை
போதும் போதும் தனிமை
பிள்ளை என்னும் கொடிமுல்லை கண் வளர
இல்லை இல்லை கவலை
ஆ ஆ ஆ ஆ...இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆ ஆ ஆ ஆ...தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்
கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

No comments: