Sunday, July 21, 2013

ஹேய் ஓராயிரம் - மீண்டும் கோகிலா

பாடல்: ஹேய் ஓராயிரம்
திரைப்படம்: மீண்டும் கோகிலா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


ஹேய்...
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்

கீழ்வானிலே இளஞ்சூரியன்
தேரோட்டமே காண
கீழ்வானிலே இளஞ்சூரியன்
தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
இளஞ்சோடியின் விழிஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே இனிமையை ரசிக்காதோ

ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் லாலாலலா

Friday, July 19, 2013

ஓராயிரம் திருவாசகம் - திருப்பங்கள்

பாடல்: ஓராயிரம் திருவாசகம்
திரைப்படம்: திருப்பங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
கண்களிலே காதல் இளம் ஜாடை
கலந்துவிட்டால் மல்லிகைப்பூ வாடை

மோகம் எனும் கவியெழுதும் தேகம்
மூன்று தமிழ் பாடிவரும் ராகம்
தேடி உனை கண்டுகொண்ட யோகம்
தேவதையில் நீயும் ஒரு பாகம்

ஆயிரம் காலம் சொல்வேன்
ஆலயம் எங்கும் சொல்வேன்
நீ வந்த நாளே வாழ்வின்
நன்நாளாம் நன்நாளாம் நன்நாளாம்

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

வள்ளுவனின் இல்லறத்தைக் கேட்டு
உள்ளமெல்லாம் மின்னியதோர் பாட்டு
வெள்ளமென ஆசைகொண்டேன் நேற்று
பிள்ளையிடம் பொங்குது தாலாட்டு

ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ

நம்மைவிட வாழ்பவர்கள் இல்லை
நாமிருக்கும் சொர்க்கமிதே எல்லை
தென்றலுடன் சேர்ந்தம்மா முல்லை
தினம் தினமும் தேன்நிலவு கொள்ளை

நாளைய வாழுவும் நீயே
கோவிலின் தெய்வம் நீயே
தேடிய செல்வம் நீயே
என் தேவி என் தேவி என் தேவி

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

Monday, July 1, 2013

பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
திரைப்படம்: உயிரே
பாடியவர்: உன்னிமேனன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


ஓ கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் பொன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்