பாடல்: ஓராயிரம் திருவாசகம்
திரைப்படம்: திருப்பங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்
ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்
காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
கண்களிலே காதல் இளம் ஜாடை
கலந்துவிட்டால் மல்லிகைப்பூ வாடை
மோகம் எனும் கவியெழுதும் தேகம்
மூன்று தமிழ் பாடிவரும் ராகம்
தேடி உனை கண்டுகொண்ட யோகம்
தேவதையில் நீயும் ஒரு பாகம்
ஆயிரம் காலம் சொல்வேன்
ஆலயம் எங்கும் சொல்வேன்
நீ வந்த நாளே வாழ்வின்
நன்நாளாம் நன்நாளாம் நன்நாளாம்
ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்
வள்ளுவனின் இல்லறத்தைக் கேட்டு
உள்ளமெல்லாம் மின்னியதோர் பாட்டு
வெள்ளமென ஆசைகொண்டேன் நேற்று
பிள்ளையிடம் பொங்குது தாலாட்டு
ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ
நம்மைவிட வாழ்பவர்கள் இல்லை
நாமிருக்கும் சொர்க்கமிதே எல்லை
தென்றலுடன் சேர்ந்தம்மா முல்லை
தினம் தினமும் தேன்நிலவு கொள்ளை
நாளைய வாழுவும் நீயே
கோவிலின் தெய்வம் நீயே
தேடிய செல்வம் நீயே
என் தேவி என் தேவி என் தேவி
ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்
No comments:
Post a Comment