Tuesday, November 5, 2013

அவளே என் காதலி - பேரும் புகழும்

பாடல்: அவளே என் காதலி
திரப்படம்: பேரும் புகழும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தாலாட்டும் பிள்ளை ஒன்று
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ...மலரோ...கனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ...இதுவோ...எதுவோ

அவளே என் காதலி
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ...குலமோ...பயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்...நாணம்...வெட்கம்

அவனே என் காதலன்
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அம்மன் அலங்காரம் - ஒரு வாரிசு உருவாகிறது

பாடல்: அம்மன் அலங்காரம்
திரைப்படம்: ஒரு வாரிசு உருவாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ஹ்ம் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம் ம்ம்
அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ஹ்ம் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம்

கூந்தல் தொட்டுப் பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளத்தானோ நாயகனின் உள்ளம்
கூந்தல் தொட்டுப் பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளத்தானோ நாயகனின் உள்ளம்

கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள்
ஹா ஆ ஆ கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள்
அந்த நேர்த்தியைப் பார்க்கையில் நங்கையும் பூவுடல் தீயென காய்கின்றாள்
காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள்
ஹா ஆ ஆ காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள்
இரு கன்னத்து தாமரை கைப்பட கைப்பட பொன்னென ஒளிர்கின்றாள்
ஆடை கொண்டு தேரை மூடுவது என்ன
ஆசை கொண்டு ஏதோ தேடுவது என்ன

அஹ்ஹா அம்மன் அலங்காரம் ஆ ஹ ஹா அந்திப்பகல் தோறும் ஏ ஹெ ஹே
அர்ச்சனைக்கு யோகம் ஆ ஹ ஹா அர்த்த ஜாம நேரம்

பூந்தளிர் ஊஞ்சலில் காற்றெனும் தலைவன் அதிசயம் பார்க்கின்றான்
இந்தப் பூவையின் வாயிதழ் புன்னகை மீட்டிட ஸ்ருதிகள் சேர்க்கின்றான்
மேற்திசை வானத்தில் மேகத்தின் மடியில் கதிரவன் சாய்கின்றான்
இந்த மங்கையின் மார்பினில் மன்னவன் சாய்ந்து மையலில் தோய்கின்றான்
வானம் கொண்ட நீலம் வஞ்சி விழி கொள்ள
நாணம் என்ன தேவை நான் அறிய சொல்ல

அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம்

அலை மீது தடுமாறுதே - அன்புள்ள மலரே

பாடல்: அலை மீது தடுமாறுதே
திரைப்படம்: அன்புள்ள மலரே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: இளையராஜா


அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

கண்ணில் இன்னும் சிந்தக்கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்ணை பெண்ணாய்க்காணும் காலம் இல்லை
போதும் போதும் தனிமை
பிள்ளை என்னும் கொடிமுல்லை கண் வளர
இல்லை இல்லை கவலை
ஆ ஆ ஆ ஆ...இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆ ஆ ஆ ஆ...தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்
கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

Monday, November 4, 2013

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி - புண்ணியம் செய்தவள்

பாடல்: செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
திரைப்படம்: புண்ணியம் செய்தவள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஹே...ஹே...ஆ...ஹா
ஹே...ஹே...லா...ல...லா
ல...லா...ல...லா
ல...லா...லா...ல...லா

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீயென்றே நினைத்தேன்

தென்பொதிகை வரும் தென்றல் எது
தென்பொதிகை வரும் தென்றல் எது
அது நீயென்றே நினைத்தேன்
கண் கவரும் ஒரு செங்கமலம்
கண் கவரும் ஒரு செங்கமலம்
என நான் உன்னை அணைத்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல ஹா
ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல லா

சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ
சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ

மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ

மங்கையொரு குளிர் கங்கையென
தினம் நான் வந்தே குளிப்பேன்
உள்ளவரை எனை அள்ளியெடு
அதில் நான் என்னை மறப்பேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

லா லா லா லா ல ல ல் ல லா
லா லா லா லா ல ல ல் ல லா

லா லா ல லா...லா லா லா
லா லா ல லா...லா லா லா

அங்கொரு தம்பதிகள் ஆயிரம் சங்கதிகள்
சொல்வதைக் கேட்டாயோ கண்ணனே
அன்பெனும் சன்னதியில் மன்னனும் உன் மடியில்
துஞ்சிட வேண்டாமோ கண்மணி
துஞ்சிட வேண்டாமோ கண்மணி

உன் அடிமை இந்தப் பெண் அடிமை
எனை நான் அன்றே கொடுத்தேன்
செவ்விதழோ ஒரு செம்பவளம்
அதில் தேன் அள்ளிக் குடித்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
அதில் நான் உன்னை அழைத்தேன்

Saturday, November 2, 2013

இரு மனம் கொண்ட - அவர்கள்

பாடல்: இரு மனம் கொண்ட
திரைப்படம்: அவர்கள்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & சதன்


ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்! யெஸ் பாஸ்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
நாணல்? மீ? ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியினில் சொந்தம் தேடுகின்றாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
இஃப் இட் இஸ் அபூர்வ ராகம்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ

பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
நோ இட்ஸ் பேட்...பட் ஐயாம் மேட்
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

ஹ ஹா ஹ ஹ ஹா ஹா ஹா
வாட்? கப கபா கப கபா ம்ம்?
ஜூனியர்! ம்ம்!

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
பாஸ்! லவ் ஹாஸ் சீஸன்! ஆர் ஈவன் ரீஸன்!
ஷட் உப்!

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனுக்கு ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
இட்ஸ் ஹைலி இடியாட்டிக்!
நோ பாஸ்! ஒன்லி ரொமாண்டிக்!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன்...மயங்குகிறாய்

உனை நான் அறிவேன் - கோடீஸ்வரன் மகள்

பாடல்: உனை நான் அறிவேன்
திரைப்படம்: கோடீஸ்வரன் மகள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
இசை: சக்ரவர்த்தி


உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ

இது மன்னவன் கோயில் தீபமல்ல
முத்து மாலைகள் சூடிடும் ரூபமல்ல
இந்த சாகசப் பேச்சுக்கள் தேவையில்லை
எந்தன் கோயிலில் வேறொரு பாவையில்லை
மடி வரும் கொடியே நான் தானோ
மணி இதழ் யாவும் தேன் தானோ
சித்திரச்சிலை போல் இடைதான் ஆட
சிறு விழிதான் சரிகம பாட
சரசங்கள் பயிலும் சங்கீதமோ
சகலமும் புரியும் சந்தோஷமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

பசும் புல்வெளி மீதினில் பள்ளி கொள்ள
வரும் பைங்கிளி நீயென அள்ளிக்கொள்ள
திருமேனியில் ஏதோ மெல்ல மெல்ல
ஒரு மின் அலை பாய்வதை என்ன சொல்ல
மறந்தேன் நான் எனை மாலையிலே
மறைத்தேன் மேனியை சேலையிலே
கைதான் காதலில் பூமாலை
மங்கை அறிவாள் கண்ணன் லீலை
எனை கொஞ்சம் நெருங்கு இன்றாவது
இடம் கொஞ்சம் கொடுத்தால் என்னாவது

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

Friday, November 1, 2013

ஆழ்கடலில் தத்தளித்து - ராகம் தேடும் பல்லவி

பாடல்: ஆழ்கடலில் தத்தளித்து
திரைப்படம்: ராகம் தேடும் பல்லவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்


ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

காதல் மொழியைப் பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

மார்கழி மாதக் கோலமிட்டாள்
தண்ணீர் குடம் தூக்கி வந்தாள்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்
கதை மாறிடவே கரை வேறு கண்டாள்
கால அலைகளுடன் புது நதியைக்கொண்டாள் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக் கடலானேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்