Saturday, June 29, 2013

வசந்தமே அருகில் வா - அமரன்

பாடல்: வசந்தமே அருகில் வா
திரைப்படம்: அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: ஆதித்யன்


வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

மழையும் நீயே - அழகன்

பாடல்: மழையும் நீயே
திரைப்படம்: அழகன்
பாடியவர்: எஸ்பி.பாலசுப்ரமணியம்
இசை: மரகதமணி


மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அது தானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அது தானா மோன நிலை
இதுதான்...சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக்கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யார் அறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யார் அறிவார்
முதலாய்...முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

Friday, June 28, 2013

வானும் மண்ணும் - காதல் மன்னன்

பாடல்: வானும் மண்ணும்
திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா
இசை: பரத்வாஜ்


வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாருமிங்கு இல்லை
மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை
வெண்ணிலா நீராற்றிலே என்றும் விழுந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் நிலா தங்கச்சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
திறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதமொன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அதை கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலி உண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே

வசந்தமும் நீயே - கண்ணீர் பூக்கள்

பாடல்: வசந்தமும் நீயே
திரைப்படம்: கண்ணீர் பூக்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்


வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

மாலை நான் மலரானவள் மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும் தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள் தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள் நான் காணலாம்

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

ஆடை ஏன் கலைகின்றது ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது தேகம் ஏன் சுடுகின்றது
ஏனிந்த மாயங்கள் யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள் எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

தீபங்கள் எரிகின்றன தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

கையில் மிதக்கும் கனவா - ரட்சகன்

பாடல்: கையில் மிதக்கும் கனவா
திரைப்படம்: ரட்சகன்
பாடியவர்: ஶ்ரீனிவாசன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


கனவா இல்லை காற்றா
கனவா நீ காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய் விடவா
வழியில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி

ம்ம்ம் நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கனவா நீ காற்றா
கனவா நீ காற்றா

சந்தன புன்னகை - ஷங்கர் கணேஷ்

பாடல்: சந்தன புன்னகை
திரைப்படம்: நாடோடி ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்


சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே

நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
சேலைதொடு மாலையிடு இளமையை தூதுவிடு பாடு

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு மன்மத சேதி கொடு பாடு

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும் ஆஹா ஹா ஹா

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் - ஓ மானே மானே

பாடல்: ரோஜா ஒன்று உள்ளங்கையில்
திரைப்படம்: ஓ மானே மானே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத்தேட
என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத்தேட
பெண் ஆற்றில் நான் இன்று நீராட

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
உன் கையில் என்னை நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா வேறேன்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று நான் கண்டேன்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு

மௌனமான நேரம் - சலங்கை ஒலி

பாடல்: மௌனமான நேரம்
திரைப்படம்: சலங்கை ஒலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மௌனமான நேரம்...
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்...
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
கூதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி...
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ...

மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்...
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

Thursday, June 27, 2013

இருந்தா நல்லா இரு - மேயர் மீனாட்சி

பாடல்: இருந்தா நல்லா இரு
திரைப்படம்: மேயர் மீனாட்சி
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பழகும் கூட்டம் விலகிப் போயி
தனியே நின்னு வாடாதே

நிலையே தண்ணி போட்ட பின்னும்
நிதானம் மட்டும் மாறாது
நெருப்பு பொட்டி எங்கே வச்சேன்
அதுதான் கொஞ்சம் புரியாது
அடச்சீ...கம்முன்னு கெட

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
புண்ணில் பட்ட ஈட்டி ஆகும்
உன்னைத் தொட்ட என் வாழ்வு

சொர்க்கம் பார்க்கப் போகும் போது
நீ பக்கம் வந்து நிக்காதே
வெட்கம் மானம் பார்க்கப் போனா
விஷயம் ஒண்ணும் நிக்காதே
அடச்சீ...கம்முன்னு கெட

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

சந்திரப்பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

பாடல்: சந்திரப்பிறை பார்த்தேன்
திரைப்படம்: கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

நகரத்து வீதியில் நாயகன் வந்தார்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி
நகரத்து வீதியில் நாயகன் வந்தார்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி
திருமணம் முடிந்ததடி
திருமணம் முடிந்ததடி
முகத்திரை போட்ட பெண்ணுக்கும்
காதல் முத்திரை விழுந்ததடி
முதலிரவென்றால் அடியே மனது
மோகனம் படித்தது

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நான் அவரிடம் தஞ்சமடி
ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நான் அவரிடம் தஞ்சமடி
மூடிய உடலின் அழகை முழுவதும்
அவர் விழி பார்த்ததடி
முன்னிரவில் அவர் தொடங்கிய
கதையும் விடிந்தபின் முடிந்ததடி

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

அல்லா உரைத்த கடமையை
முடித்தோர் ரம்ஸான் வந்ததடி
அவனை நினைத்து கால்களை மடித்து
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி
அப்பா அம்மா என்று பையனின்
அன்பு வளர்ந்ததடி
ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்
அடுத்ததும் பிறக்குமடி

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி

அன்பே அன்பே - சாதனை

பாடல்: அன்பே அன்பே
திரைப்படம்: சாதனை
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அன்பே அன்பே...எங்கே எங்கே
அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

பாவை செய்த பாவம் என்ன
வந்து சொல்லக் கூடாதோ
சாவை இன்னும் கொஞ்ச நேரம்
தள்ளிப் போடக் கூடாது
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
தாங்கவில்லை பெண் மனம்
காண வேண்டும் உன் முகம்
கண்டு போக சம்மதம்

அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

தேகம் மாய்ந்து போகக்கூடும்
காதல் மாய்ந்து போகாது
நிலவு தேய்ந்து போகக்கூடும்
வானம் தேய்ந்து போகாது
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றிப் பார்ப்பதோ
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றிப் பார்ப்பதோ
நெஞ்சில் இன்று போர்க்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாவு மூன்று அங்குலம்

அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

Sunday, June 23, 2013

பொன்னி நதி வெள்ளம் - முதல் வசந்தம்

பாடல்: பொன்னி நதி வெள்ளம்
திரைப்படம்: முதல் வசந்தம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ ஆ...ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூமேனி
பருகத் துடிக்கும் நான் தேனீ
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தங்க முகம் இந்த முகம்
தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது
இது இளமை...இனிமை...புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது
அங்கும் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது
இனி இனிமையின்...கனவுகள்...உதயம்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்
நீ தந்தது என்றுமே இன்பமே
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

Saturday, June 22, 2013

தேவன் மகளோ மலரோ - காட்டுக்குள்ளே திருவிழா

பாடல்: தேவன் மகளோ மலரோ
திரைப்படம்: காட்டுக்குள்ளே திருவிழா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில்
சந்தோஷ வெள்ளங்கள் ஓட
ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ
ஆனந்த ராகங்கள் பாட
தாமரையின் இதழ்மீது தேன்துளிகள் விழும்போது
சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ

தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி
ஆணைகள் அம்பாரி தாங்க
ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர
வெண்மேகம் பன்னீரைத் தூவ
ஆசைகளை விழி பேச ஜாடைகளின் மொழி பேச
தொடங்கும் தொடரும் காதல் யாகம்

தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

தேவனே எந்தன் தேவனே - மறக்கமாட்டேன்

பாடல்: தேவனே எந்தன் தேவனே
திரைப்படம்: மறக்கமாட்டேன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
அணை மீறலாம் நதியாகியே
தினம் காணலாம் சுகமே
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

பார்க்காதே சாமியே தாங்காது பூமியே
ராக்காலம் பூங்குயில் கூவாமல் போகுமோ
வான்மீது வெண்முகில் ஆடாதோ ஆண்மயில்
மான்சூட பூச்சரம் நான் வாங்கும் நாள் வரும்
வா வா வா பொன்நாளே வா மண்மேலே நீதான்

தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

தேனூறும் தேகமே நீ தீண்டும் நேரமே
நாம் சேர்ந்து வாழவே நீ ஏந்து மாலையே
தூவாதோ தேன்மழை தீராதோ தீ அலை
தூங்காத ராத்திரி நீ வந்து ஆதரி
வா வா வா பொன்மானே வா மண்மேலே நீதான்

தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே
ஒளி பாயலாம் வழி மீதிலே
இனி காணலாம் நலமே

தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

அந்தியில் சந்திரன் வருவதேன் - என்ன தவம் செய்தேன்

பாடல்: அந்தியில் சந்திரன் வருவதேன்
திரைப்படம்: என்ன தவம் செய்தேன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

தலைவனின் சந்தோஷம் தலைவனல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

பள்ளியிலே வெள்ளிநிலா - கலியுகம்

பாடல்: பள்ளியிலே வெள்ளிநிலா
திரைப்படம்: கலியுகம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்


பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா
பார்க்கும் போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு
இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு
என் தோள்களில் நீ இல்லையே
தாலாட்டிடும் தாயும் இல்லையே
அன்னை பிள்ளை சொந்தம் போகுமா
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

வானுக்கும் பூமிக்கும் பாதைகள் அமைத்தேன்
வாழ்க்கைக்கும் தேவைக்கும் ஆசைகள் விதைத்தேன்
தீபாவளி இருளானதே சூராவளி உருவானதே
பாடும் ராகம் கேட்கவில்லையா

பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா
பார்க்கும் போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

ஒரு புல்லாங்குழல் - உனக்காக ஒரு ரோஜா

பாடல்: ஒரு புல்லாங்குழல்
திரைப்படம்: உனக்காக ஒரு ரோஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: டி.ஆர்.ராஜேந்தர்


ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

சேலை அணிந்த மாது சோலை என்னும் போது
அவன் தானே அவள் தேடும் காத்து
காத்து அவனை நினைத்து காத்துக்கிடந்த போது
போனானே வேறு சோலை பாத்து
இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
கோலம் கலைந்த வாசல் இவள்
மேகம் சூழ்ந்த நிலவு இவள்

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

நீலம் சிந்தும் நயனம் நீரில் ஆடும் துயரம்
ஸ்ருதி மாற தவிக்கின்ற ராகம்
அவனை பாதை என்று நினைத்த பாவை பயணம்
வழி மாற தடுமாறும் பாதம்
எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
வார்த்தை தொலைந்த கவிதை இவள்
வாழ்க்கை குலைந்த பேதை இவள்

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை

பாடல்: ஆகாய வெண்ணிலாவே
திரைப்படம்: அரங்கேற்ற வேளை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
இசை: இளையராஜா


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்கவேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்கவேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதிபாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளிவீசும் கோயில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம்
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

காற்றில் எந்தன் கீதம் - ஜானி

பாடல்: காற்றில் எந்தன் கீதம்
திரைப்படம்: ஜானி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை
நேரக்காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்க நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை
நேரக்காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

Friday, June 21, 2013

இது பால் வடியும் முகம் - அன்புள்ள அப்பா

பாடல்: இது பால் வடியும் முகம்
திரைப்படம்: அன்புள்ள அப்பா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: ஷங்கர் கணேஷ்


இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆடைகள் நூலுக்கு சொந்தம்
ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்
வானுக்கு சூரியன் சொந்தம்
வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்
நீ என் சொந்தம் நான் உன் சொந்தம்
தந்தம் யானைக்குத்தானே சொந்தம்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

பொன்னுக்கு நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்
வீணைக்கு நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்
என்னைத் தந்தேன் உன்னைத் தந்தாய்
காதல் சொர்க்கங்கள் கண்ணில் தந்தாய்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

லல லா லல லா லலா
லல லா லல லா லலா
லல லாலா லா லல்

ஹலோ மை டியர் - மன்மத லீலை

பாடல்: ஹலோ மை டியர்
திரைப்படம்: மன்மத லீலை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ...no
பூவிரியும் தேனோ...no no
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
Not yet
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
Really
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்
I don't mind

கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...ஹலோ

அழகாகச் சிரித்தது - டிசம்பர் பூக்கள்

பாடல்: அழகாகச் சிரித்தது
திரைப்படம்: டிசம்பர் பூக்கள்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

மழைக்காலத்தில்...லல லல லா
நிழல் மேகங்கள்...லல லல லா
மலையோரத்தில்...லல லல லா
சிறு தூறல்கள்...லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

மழைக்காலத்தில்...லல லல லா
நிழல் மேகங்கள்...லல லல லா
மலையோரத்தில்...லல லல லா
சிறு தூறல்கள்...லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணமென்ன அச்சமென்ன

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலினில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

Thursday, June 20, 2013

நான் நல்ல ரசிகன் - தேன் சிட்டுக்கள்

பாடல்: நான் நல்ல ரசிகன்
திரைப்படம்: தேன் சிட்டுக்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
இசை: விஜயரமணி


கயல்விழி காரிகையே
காவியத்தின் நாயகியே
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே
ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
பறை அறியா நடை நடந்து
தென்றலென மிதப்பவளே

நான் நல்ல ரசிகன் நீ நல்ல ரசிகை
எழுந்து வா ஆடல் உண்டு
இசைந்து தா பாடல் ஒன்று
அச்சம் நாணம் இங்கே இன்னும் ஏனடி
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்
தொடங்க வா ஆடல் இங்கே
துணிந்து தா பாடல் ஒன்று
என்னை வெல்லும் மன்னன் இங்கே யாரைய்யா
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

வண்ணம் பாடும் உள்ளம்
கன்னி உன்னை வெல்லும்
எந்தன் ராகம் தாளம் பல்லவி

வண்ணம் பாடும் உள்ளம்
என்னை என்ன செய்யும்
எங்கே ராகம் தாளம் பல்லவி

இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா
நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்

தங்கப் பாதம் ஆடும்
மங்கை போடும் தாளம்
பாட்டுக்கு பரதக்கலை தோற்குமா

மங்கை ஆடும் போது
தங்கப் பாதம் நோகும்
பாட்டுக்கு பரதக்கலை தோற்குமே

இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா

Monday, June 17, 2013

தேரோட்டம் ஆனந்த - நூல்வேலி

பாடல்: தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
திரைப்படம்: நூல்வேலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஹா...ஆ ஆ ஆ ஆ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்னச்சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்னச்சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஆ ஆ ஆ ஆ...பூந்தோட்டம்
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஆ ஆ ஆ ஆ
சேலாட்டம் விழி சீராட்டும்
இளந்தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளந்தண்டாட்டம் உடல் பாராட்டும்
என்ன என்ன சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தால்லாட்டும்
என்ன என்ன சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தால்லாட்டும்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்

Saturday, June 15, 2013

என்னுயிரே என்னுயிரே - உயிரே

பாடல்: என்னுயிரே என்னுயிரே
திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: ஶ்ரீனிவாஸ் & சுஜாதா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே

கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே...என் ஓருயிரே
வந்து சேர்ந்துவிடு என்னைச் சேரவிடு
இல்லை சாகவிடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல்வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதெங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுயநிலை என்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இதுவரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே...

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

இந்த காதலில் மரணம்தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது தெய்வீக காதலில்லை
இந்த காதலில் மரணம்தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது காதலில்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே...என் ஓருயிரே
என் ஆருயிரே...என் ஓருயிரே

Wednesday, June 12, 2013

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவே ஒரு சங்கீதம்

பாடல்: பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
திரைப்படம்: நினைவே ஒரு சங்கீதம்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட

பகலிலே...பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

நான் இருக்கும் அந்த நாள் - அழியாத கோலங்கள்

பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழியாத கோலங்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

Friday, June 7, 2013

உறக்கமில்லா இரவுகள் - ஸ்பரிசம்

பாடல்: உறக்கமில்லா இரவுகள்
திரைப்படம்: ஸ்பரிசம்
பாடியவர்கள்: முரளி & வாணி ஜெயராம்
இசை: ரவி


உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்
என் நினைவில் உனது அழகு முகம் அது சுகம்
கண் இமை நனைவது துயரம் எங்கே வசந்தம்
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்

கை அணைப்பினில் மெய் மறந்ததும்
பொய் சினத்தினில் மெய் கரைந்ததும்
கை அணைப்பினில் மெய் மறந்ததும்
பொய் சினத்தினில் மெய் கரைந்ததும்
கானல் நீரில் குளிக்கவா
வெறும் கனவுக்கனலில் குளிர் காயவா
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்

என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா

ஓர் நாள் பழக்கம் அல்ல - அண்ணி

பாடல்: ஓர் நாள் பழக்கம் அல்ல
திரைப்படம்: அண்ணி
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்


ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
காலம் வாய்த்தது கைமேல் விழுந்தது
வா வா...வா வா வா வா
ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

கோடாளி முடிச்சு போட்டு
கொண்டையைத்தான் மடிச்சிப்போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்குறா
கண்ணுல வண்ணத்திப்பூச்சியாட்டம் பறக்குறா

ஏர் ஓட்ட மச்சக்கானி உண்டு
நீர் பாய்ச்ச ஆழக்கேணி உண்டு
வா புள்ள வயசுப்புள்ள ஆசை விடுமோ
ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
பூவாடை பாவாடை பூவாடை பாவாடை காற்றில் வீச

ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

தை மாசம் மாலை போடப்போறேன்
நீ போட்டா நானும் கூட வாரேன்
பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆனந்தம் ஆரம்பம் ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
காலம் வாய்த்தது கைமேல் விழுந்தது
வா வா...வா வா வா வா
ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

காதல் காதல் காதல் - காதல் காதல் காதல்

பாடல்: காதல் காதல் காதல்
திரைப்படம்: காதல் காதல் காதல்
பாடியவர்கள்: A.V.ரமணன் & உமா ரமணன்
இசை: ஷங்கர் கணேஷ்


காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத
சொல்லேது இன்னும்
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

தங்கங்கள் என்ன வைரங்கள் என்ன
அங்கங்கள் எங்கெங்கும் மின்னும் ஆ ஆ
சொல்லாததென்ன சொல்லுங்கள் மெல்ல
சொர்க்கத்தில் என் மேனி துள்ளும்
இனிய இரவிலே நிலவின் ஒளியிலே
அமுத மழையிலே நனையும் உயிர்களே
அந்திக்கலைகளை பயில்வது சுகமல்லவோ
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

மும்தாஜும் நானல்லவோ
வண்டு மொய்க்காத தேனல்லவோ
மும்தாஜும் நானல்லவோ
வண்டு மொய்க்காத தேனல்லவோ
துள்ளும் கஸ்தூரி மானல்லவோ
உன்னைக்காணாத கண்ணென்னவோ
அந்த வானத்து முன்றாம் பிறை
நெற்றி வண்ணத்தில் நான் பார்க்கிறேன்
இன்பத்தை நான் கேட்கிறேன்

காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

நீல வானம் தந்த சீதனம்
அடடா விழியின் நிறமோ ஓ ஓ
நீந்தும் மேகம் தந்த சீதனம்
அதுதான் அசையும் குழலோ குழலோ

ஒடியும் இடை அசைய நெடிய குழல் சரிய
அழகு நடை பயிலும் அன்னமே
உனது விழிகள் எனை மதன கலை பயில
வருக வருகவென சொல்லுமே

கவிதை நடை அழகே வனிதை எனதுடலில்
விரக நினைவைத் தரும் மன்னவா
இரவு நிலவொளியில் இளமை உறவுகளின்
இனிய கதைகள் பல சொன்னவா

காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

Wednesday, June 5, 2013

இசைபாடு நீ இளந்தென்றலே - இசைபாடும் தென்றல்

பாடல்: இசைபாடு நீ இளந்தென்றலே
திரைப்படம்: இசைபாடும் தென்றல்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே

நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட
பாலோடு தேனும் விழி மீதில் ஓட
ஸ்ருதியும் லயமும் விலகாமல்
உறவாடும் பொழுதல்லவோ

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே

ஸா ஸ ஸ பா ப ப
ம ப ம ப கா க ம கா
க ம ப ம க ம க ம ரீ
ஸ ஸ ரீ ஸ ஸ ஸ ஸ கா
ஸ ஸ ரீ ஸ ஸ க ம பா
க ம ப த ப த ப த ப மா
க ம ப த ப த ப நி ஸா

யார் யார்க்கு யாரென்று தெய்வங்கள் சொல்லும்
அது தானே முடிவாக வெல்லும்
மனம் போல வாழ்வு எனை வந்து சேர
மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட
இரவும் பகலும் தொடர்கின்ற
ஆனந்தம் இதுவல்லவோ

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
இசைபாடு நீ இளந்தென்றலே

அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

பாடல்: அதோ மேக ஊர்வலம்
திரைப்படம்: ஈரமான ரோஜாவே
பாடியவர்: மனோ (சுனந்தா)
இசை: இளையராஜா


அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

உனது பாதம் அடடட இளவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
பந்து ஆடச்சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச்செய்த பிரம்மனே உன்னைப்பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

ஆசை முகமே - என் வீடு என் கணவர்

பாடல்: ஆசை முகமே
திரைப்படம்: என் வீடு என் கணவர்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: B.சுரேந்தர்


ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட
நீலக்கடலில் எழும் அலைபோலே மனம் ஊஞ்சல் ஆட
மீண்டும் உனைச் சேர்ந்திட துடித்தேன்
வசந்தம் விளைய வா புதிய பொழுதுகள் விடிய
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

யாரைச் சொல்ல இறைவா அன்பில் என்ன குறைவா
பாதைவிட்டு நடந்தும் பாசம் வைத்த தலைவா
என்றும் இவள்தான் உந்தன் காவிய நாயகி இரவும் பகலும்
எனையே நினைத்தாய் நினைத்தே இளைத்தாய்
கண்ணான கண்ணா வா பிரிந்த உறவுகள் தொடர
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

தாயைப் போல இருப்பேன் தாவி உன்னை எடுப்பேன்
சேயைப் போல நினைத்து சேவை செய்யத் துடிப்பேன்
இவள் இதழ்தான் உந்தன் நோய்களைத் தீர்த்திடும் மருந்து விருந்து
நலம் நீ பெருக சுகம் நீ தருக
நீங்காமல் நாளும் நான் உனது நிழலென இருக்க

ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட
நீலக்கடலில் எழும் அலைபோலே மனம் ஊஞ்சல் ஆட
மீண்டும் உனைச் சேர்ந்திட துடித்தேன்
வசந்தம் விளைய வா புதிய பொழுதுகள் விடிய
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

Tuesday, June 4, 2013

அலைபாயும் காற்றே - பஞ்ச பூதம்

பாடல்: அலைபாயும் காற்றே
திரைப்படம்: பஞ்ச பூதம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்


அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ

மழைக்கால மேகங்கள் அழைக்கின்ற ராகங்கள்
மணிச்சங்கு ஓசை கண்டு புதுப்பாடல் பாடும் வண்டு
எங்கே உண்டு இங்கே உண்டு வாராய் இங்கே
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ

ரதிதேவி நயனங்கள் மலர்மாறன் புருவங்கள்
விளைகின்ற காட்டில் இன்று எழிலான கலைமான் ஒன்று
ஆடல் கண்டு கூடல் கொள்ள வாராய் இங்கே
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ

கார்கால மேகம் - இரண்டு மனம்

பாடல்: கார்கால மேகம்
திரைப்படம்: இரண்டு மனம்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்
இசை: கங்கை அமரன்


கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன
தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே
ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம்
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன

மாறாத சொந்தம் கல்யாண பந்தம்
உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம்
காலங்கள் மாறும் காயங்கள் ஆறும்
நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம்
எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள்
கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள்
நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே

கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன

ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும்
முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும்
நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று
ஓர் பாடமே கூறுமே காலை வானம்
பூமாலையாக நான் மாற வேண்டும்
பூப்போல நாளும் நீ வாழ வேண்டும்
நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே

கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி காலங்கள் தோறும்
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி
சோகங்கள் இங்கே நீராவி ஆகும்
சொந்தங்களே வாழுமே எந்த நாளும்
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி

எந்தன் அன்பே சொந்தமே - இரண்டு மனம்

பாடல்: எந்தன் அன்பே சொந்தமே
திரைப்படம்: இரண்டு மனம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

மன்னவன் எந்தன் நெஞ்சம் மங்கை நீ வாழும் மஞ்சம்
கண்ணிலே காதல் கொஞ்சும் கன்னி நான் உந்தன் தஞ்சம்
எனது மனம் என்றும் உன்னோடு வேறு ஒரு பெண்ணை நாடாது
இளமை பொங்கும் காதல் பூமாது இன்னொருவர் கையில் சேராது
ஓடும் நதியே உன்னைத் தொடர்ந்தே தினம் வரும் நிழல் நானே
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

வண்ணங்கள் வானில் மாறும் வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
காலங்கள் மாறும் போதும் காதலோ நெஞ்சில் வாழும்
வளரும் பிறை வானில் தேய்ந்தாலும் அன்பு மனம் என்றும் தேயாது
இமயம் அது சாய்ந்து வீழ்ந்தாலும் என்றும் இந்தக் காதல் சாயாது
வாழும் வரைக்கும் நம்மை பிரிக்கும் தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

Monday, June 3, 2013

மங்கை தங்கை மலர்க்கை - தெய்வத்திருமகள்

பாடல்: மங்கை தங்கை மலர்க்கை
திரைப்படம்: தெய்வத்திருமகள்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: ஜி.கே.வெங்கடேஷ்


தங்கை கொடுத்தார் திருமால் மதுரையிலே
தன் கை கொடுக்க சிவனார் வருகையிலே
உன் கை பிடிப்பான் திருமால் மலைமேலே
உடனிருப்பார் பிரம்மா சிவனார் அருகினிலே

மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
பங்கய மலரே இரு கை
அந்த பார்க்கடல் நாயகன் துணைக்கை
அந்த பார்க்கடல் நாயகன் துணைக்கை
மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை

மிதிலையிலே நீ சீதை
அந்த மேகவண்ணன் துணைப்பாவை
மிதிலையிலே நீ சீதை
அந்த மேகவண்ணன் துணைப்பாவை
மலையினில் நீ இனி தேவி
அந்த மாதவன் மார்பினில் ஆவி
மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை

கோகுலத்தில் நீ ராதை
அந்த கோவிந்தனின் திருக்கோதை
ஶ்ரீகிருஷ்ண நாயகன் லீலை
இது ஶ்ரீனிவாசன் வரும் வேளை
ஶ்ரீகிருஷ்ண நாயகன் லீலை
இது ஶ்ரீனிவாசன் வரும் வேளை
மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை

வலது கையில் ஒரு அம்சம்
நீ மலர்மகளின் திரு வம்சம்
விரகத்தில் துடிக்குது அங்கம்
இனி விரைவினில் நடைபெறும் சங்கம்
விரகத்தில் துடிக்குது அங்கம்
இனி விரைவினில் நடைபெறும் சங்கம்
மங்கை தங்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை

தனக்கொரு சொர்க்கத்தை - வாழ நினைத்தால் வாழலாம்

பாடல்: தனக்கொரு சொர்க்கத்தை
திரைப்படம்: வாழ நினைத்தால் வாழலாம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா


தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

அரசனின் மகனல்ல அம்பிகாபதி
அமர காவியம் பாடினாள் அமராவதி
இறைவனின் சாலையில் விதித்த விதி
அரசன் தலையிட்டால் அதுதான் கதி
அதுதான் கதி

பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பணமுள்ள இடம் உலகை ஆட்டலாம்
பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமே
நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

காதல் என்பது தேவனின் சன்னிதி
தடையென்று வந்தால் முடிவுதான் நிம்மதி
தந்தையின் பெருமையா மகளின் நற்கதி
தானென்று நினைப்போர்க்கு இல்லையோர் சந்ததி
இல்லையோர் சந்ததி

கனி விட்டதோடு கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய கிளியொன்று
ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

கனி விட்டதோடு கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய கிளியொன்று
ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

உலகமும் இதில் உளுந்து போன்றது
மரணமும் இதில் கடுகு போன்றது மனமே
மரணத்தில் தான் இனி பிரிவென்பது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

Sunday, June 2, 2013

அதே காதல் அதே கீதம் - காதல் கீதம்

பாடல்: அதே காதல் அதே கீதம்
திரைப்படம்: காதல் கீதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
கண்மணியே உன்னை நான் கண்ணீரில் தேடவா
அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா

ஜீவன் போன பின்னாலும் உண்மைக்காதல் போகாது
ஜீவன் போன பின்னாலும் உண்மைக்காதல் போகாது
கடல் வற்றிப்போனாலும் கண்ணீர் வற்றிப்போகாது
அதே ராகமா அதே மோகமா
அதே ராகமா அதே மோகமா
காதல் வந்து காதில் சொல்லும் கானமா

அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
கண்மணியே உன்னை நான் கண்ணீரில் தேடவா

வாழ்க்கை என்ற பேரேட்டில் எந்தன் பக்கம் காணோமே
வாழ்க்கை என்ற பேரேட்டில் எந்தன் பக்கம் காணோமே
கண்ணீர் என்ற பேராற்றில் ரெண்டு பேரும் போனோமே
அதே காதல்தான் அதே கீதம்தான்
அதே காதல்தான் அதே கீதம்தான்
போகும் முன்னே ராகம் ஒன்று பாடவா

அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாடவா
கண்மணியே உன்னை நான் கண்ணீரில் தேடவா

கண்ணா வா வா - மலர்கள் நனைகின்றன

பாடல்: கண்ணா வா வா
திரைப்படம்: மலர்கள் நனைகின்றன
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத்தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
கண்ணா...வா வா

மல்லிகைப்பூவும் மழையென தூவும்
மயங்குது காதல் மனம் தானே
மலரும் மணமும் மகிழும் நினைவும்
மணமுடன் வாழவேண்டும் இன்றும் என்று
கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே

மஞ்சளின் வாசம் மணவறைக்கோலம்
குங்குமம் சூடும் குல மாது
மடியில் இருந்தால் மயக்கும் விருந்தால்
மன்மத சுகங்கள் தோன்றும் இன்றும் என்றும்
கண்ணே...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே

பிறவிகள் நூறு பிறந்திடும் போதும்
இருவரும் சேரும் வரம் கேட்போம்
இணைந்தால் இனிமை இனியேன் தனிமை
இனித்திடும் காதல் இன்பம் இன்றும் என்றும்

கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத்தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
கண்ணா...வா வா

மலரே மலரே உல்லாசம் - உன் கண்ணில் நீர் வழிதால்

பாடல்: மலரே மலரே உல்லாசம்
திரைப்படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

தாவணி கோவிலில் காவடிச்சிந்துகள்
யார் இசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ
வீடெல்லாம் காதலன் வாசனை வீசுதோ
தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்
தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தா

மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ
மோக நோய் தீரவோ நீரில்தான் மூழ்குதோ
வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம்
கண்களோ சம்மதம் கால்களே தாமதம்
ஆடைகள் ஏது நீராடும் போது
தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தா

மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
லல லா லல லா லாலா லா
லல லல லா லல லா லாலா லா