Saturday, June 22, 2013

ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை

பாடல்: ஆகாய வெண்ணிலாவே
திரைப்படம்: அரங்கேற்ற வேளை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
இசை: இளையராஜா


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்கவேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்கவேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதிபாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளிவீசும் கோயில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம்
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

No comments: