Saturday, June 22, 2013

அந்தியில் சந்திரன் வருவதேன் - என்ன தவம் செய்தேன்

பாடல்: அந்தியில் சந்திரன் வருவதேன்
திரைப்படம்: என்ன தவம் செய்தேன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

தலைவனின் சந்தோஷம் தலைவனல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

No comments: