Tuesday, June 4, 2013

எந்தன் அன்பே சொந்தமே - இரண்டு மனம்

பாடல்: எந்தன் அன்பே சொந்தமே
திரைப்படம்: இரண்டு மனம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

மன்னவன் எந்தன் நெஞ்சம் மங்கை நீ வாழும் மஞ்சம்
கண்ணிலே காதல் கொஞ்சும் கன்னி நான் உந்தன் தஞ்சம்
எனது மனம் என்றும் உன்னோடு வேறு ஒரு பெண்ணை நாடாது
இளமை பொங்கும் காதல் பூமாது இன்னொருவர் கையில் சேராது
ஓடும் நதியே உன்னைத் தொடர்ந்தே தினம் வரும் நிழல் நானே
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

வண்ணங்கள் வானில் மாறும் வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
காலங்கள் மாறும் போதும் காதலோ நெஞ்சில் வாழும்
வளரும் பிறை வானில் தேய்ந்தாலும் அன்பு மனம் என்றும் தேயாது
இமயம் அது சாய்ந்து வீழ்ந்தாலும் என்றும் இந்தக் காதல் சாயாது
வாழும் வரைக்கும் நம்மை பிரிக்கும் தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ
உள்ளம் அது மாறுமோ உன்னைவிட்டுப் போகுமோ

No comments: