பாடல்: இசைபாடு நீ இளந்தென்றலே
திரைப்படம்: இசைபாடும் தென்றல்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட
பாலோடு தேனும் விழி மீதில் ஓட
ஸ்ருதியும் லயமும் விலகாமல்
உறவாடும் பொழுதல்லவோ
இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
ஸா ஸ ஸ பா ப ப
ம ப ம ப கா க ம கா
க ம ப ம க ம க ம ரீ
ஸ ஸ ரீ ஸ ஸ ஸ ஸ கா
ஸ ஸ ரீ ஸ ஸ க ம பா
க ம ப த ப த ப த ப மா
க ம ப த ப த ப நி ஸா
யார் யார்க்கு யாரென்று தெய்வங்கள் சொல்லும்
அது தானே முடிவாக வெல்லும்
மனம் போல வாழ்வு எனை வந்து சேர
மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட
இரவும் பகலும் தொடர்கின்ற
ஆனந்தம் இதுவல்லவோ
இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
இசைபாடு நீ இளந்தென்றலே
No comments:
Post a Comment