Friday, June 28, 2013

வானும் மண்ணும் - காதல் மன்னன்

பாடல்: வானும் மண்ணும்
திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா
இசை: பரத்வாஜ்


வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாருமிங்கு இல்லை
மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை
வெண்ணிலா நீராற்றிலே என்றும் விழுந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் நிலா தங்கச்சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
திறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதமொன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அதை கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலி உண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே

No comments: