Sunday, June 2, 2013

கண்ணா வா வா - மலர்கள் நனைகின்றன

பாடல்: கண்ணா வா வா
திரைப்படம்: மலர்கள் நனைகின்றன
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத்தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
கண்ணா...வா வா

மல்லிகைப்பூவும் மழையென தூவும்
மயங்குது காதல் மனம் தானே
மலரும் மணமும் மகிழும் நினைவும்
மணமுடன் வாழவேண்டும் இன்றும் என்று
கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே

மஞ்சளின் வாசம் மணவறைக்கோலம்
குங்குமம் சூடும் குல மாது
மடியில் இருந்தால் மயக்கும் விருந்தால்
மன்மத சுகங்கள் தோன்றும் இன்றும் என்றும்
கண்ணே...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே

பிறவிகள் நூறு பிறந்திடும் போதும்
இருவரும் சேரும் வரம் கேட்போம்
இணைந்தால் இனிமை இனியேன் தனிமை
இனித்திடும் காதல் இன்பம் இன்றும் என்றும்

கண்ணா...வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத்தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
கண்ணா...வா வா

No comments: