Saturday, June 29, 2013

வசந்தமே அருகில் வா - அமரன்

பாடல்: வசந்தமே அருகில் வா
திரைப்படம்: அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: ஆதித்யன்


வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

No comments: