Friday, June 28, 2013

ரோஜா ஒன்று உள்ளங்கையில் - ஓ மானே மானே

பாடல்: ரோஜா ஒன்று உள்ளங்கையில்
திரைப்படம்: ஓ மானே மானே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத்தேட
என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத்தேட
பெண் ஆற்றில் நான் இன்று நீராட

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
உன் கையில் என்னை நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா வேறேன்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று நான் கண்டேன்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு

No comments: