Friday, May 17, 2013

எங்க போன ராசா - மரியான்

பாடல்: எங்க போன ராசா
திரைப்படம்: மரியான்
பாடியவர்: சக்திஶ்ரீ கோபாலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே

எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே
கஞ்சி ஆறிப்போச்சே நெஞ்சு ஏறி வாயேன்

நீயும் நானும் சேர்ந்தா நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்

என்ன செய்ய ராசா உண்மைதான் ஆச்சே
எங்க போன ராசா

காலம் எனக்குள் உறையுது
கண்ணீரு கடலோட கலக்குது
உன் முகம் உன் உடல் தேடுது
ஏனோ எனக்கென்ன கேடிது
எங்க போன ராசா நான் செய்ய ராசா
எங்க போன ராசா நான் செய்ய ராசா
என் வயசு வீணாகுது

எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே
கஞ்சி ஆறிப்போச்சே நெஞ்சு ஏறி வாயேன்

நீயும் நானும் சேர்ந்தா நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்

என்ன செய்ய ராசா சாயங்காலம் ஆச்சே

இன்னும் கொஞ்சம் நேரம் - மரியான்

பாடல்: இன்னும் கொஞ்சம் நேரம்
திரைப்படம்: மரியான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ என்னைவிட்டுப் போகாதே என்னைவிட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் நிறைவேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்து உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்னை இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆணையாக உயிரோடு உனக்காக
காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்புக்காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது
உன்னை இழுக்க என்னை இழுக்க என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை என்னை நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணைப் போல இருக்கணும்
என் பிள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடணும்

நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணை இன்று நாம் உருவாக்கணும்




Saturday, May 4, 2013

தினக்கு தின்னா தீயா - இஷ்டம்

பாடல்: தினக்கு தின்னா தீயா
திரைப்படம்: இஷ்டம்
பாடியவர்கள்: M.L.R.கார்த்திகேயன் & ரீட்டா
இசை: தமன்

அன்பே இது மெய்யா மெய்யா மெய்யா
ஐயோ இது பொய்யா பொய்யா பொய்யா
தவிக்கிறேன் ஐயா

தினக்கு தின்னா தீயா காதல் ஒரு மீயா
கண்ணில் குய்யா முய்யா
தாக்குதே ஐயா ஸ்ருதி ஏறுதையா

தினக்கு தின்னா தீயா காதல் ஒரு மீயா
கண்ணில் குய்யா முய்யா
கொல்லுதே ஐயா உயிர் தேடுதையா

தேகம் சுற்றுதையா காரணம் சொல்லிப்போவாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையையா
மோகம் தாக்குதையா புயலென சுற்றிப்போனாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையா
மா...ப...மா...ப...மா...ப...ரி...ம...க...ரி...ஸா

அன்பே இது மெய்யா மெய்யா மெய்யா
ஐயோ இது பொய்யா பொய்யா பொய்யா
தவிக்கிறேன் ஐயா

இரு இதழது கொய்யா
அணில் என கடி ஐயா
பிடித்தது பிடி பையா
போதாது யுத்தம் பல செய்யா

இடையிது இது மெய்யா
இல்லையிது இது பொய்யா
இடம் பொருள் எது ஐயா
கேட்டேன் காதல் பித்தையா

விழியிது விழியிது வலையா
விழுவதும் விழுவதும் கலையா
உடையிது உடையிது சிறையா
விடுதலை கேட்குது சரியா

தேகம் சுற்றுதையா காரணம் சொல்லிப்போவாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையையா
மோகம் தாக்குதையா புயலென சுற்றிப்போனாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையா
மா...ப...மா...ப...மா...ப...ரி...ம...க...ரி...ஸா

அன்பே இது மெய்யா மெய்யா மெய்யா
ஐயோ இது பொய்யா பொய்யா பொய்யா
தவிக்கிறேன் ஐயா

உனதுடல் உடல் அலையா
எனதுடல் உடல் கரையா
மறுபடி படி தொடையா
ஓயாமல் முத்தம் பல கொடையா

உனதுடல் உடல் சிலையா
எனதுடல் உடல் உளியா
தொடத்தொட புது கலையா
காண்போமே புத்தம் புது சிலையா

உனதுடல் உனதுடல் நதியா
எனதுடல் எனதுடல் நுரையா
உனதுடல் உனதுடல் பனியா
எனதுடல் எனதுடல் தீயா

தேகம் சுற்றுதையா காரணம் சொல்லிப்போவாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையையா
மோகம் தாக்குதையா புயலென சுற்றிப்போனாயா
என்னை தள்ளுதையா கொல்லுதையா வெல்லுதையா
மா...ப...மா...ப...மா...ப...ரி...ம...க...ரி...ஸா

தினக்கு தின்னா தீயா காதல் ஒரு மீயா
தாக்குதே ஐயா ஸ்ருதி ஏறுதையா

Thursday, May 2, 2013

நெஞ்சில் நினைப்பது எல்லாம் - அழகன் அழகி

பாடல்: நெஞ்சில் நினைப்பது எல்லாம்
திரைப்படம்: அழகன் அழகி
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & ஸ்வேதா
இசை: கண்ணன்

தட தடவென்று நெஞ்சு துள்ள
பட படவென்று பற்றிக்கொள்ள
மெதுவாய் மனதில் மயக்கம்
விடு விடுவென்று வார்த்தை சொல்ல
தடு தடுவென்று மௌனம் சொல்ல
இருந்தும் இது ஓர் தயக்கம்
துடிக்கிறதே துடிக்கிறதே
விதவிதமாய் நடிக்கிறதே
நெஞ்சம் என்னும் கடலுக்குள்
புயல் வந்து அடிக்கிறதே

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை
பார்க்கும் நேரம் எல்லாம்
உள்ளம் பேச நினைத்தாலும்
அங்கு வார்த்தை வருவதில்லை
அது போலவே என் காதலும்
சொல்லாமல் ஏங்குதடி

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை

பாறை மீது நீயும் சிறு பூவாய் பூத்து நின்றாய்
வேரைப் போல நீயும் தினம் என்னை தாங்கிச் சென்றாய்
தாயைப் போல நீயும் ஒரு சேயாய் பார்த்துக் கொண்டாய்
ஜென்மம் போதும் என்று இரு கண்ணில் ஏந்திச் சென்றாய்
எங்கு வாழும் போதும் பெண்ணெ உன்னை நானும் தாங்குவேன்
தூங்கும் போதும் உந்தன் பிம்பம் கண்ணில் வைத்து தூங்குவேன்

கடிகார முள் போலே நொடி நேரம் பிரியாமல்
உனக்காகவே உயிர் வாழுவேன் உனை நாளும் சுற்றிடுவேன்

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை

தட தடவென்று நெஞ்சு துள்ள
பட படவென்று பற்றிக்கொள்ள

விடு விடுவென்று வார்த்தை சொல்ல
தடு தடுவென்று மௌனம் சொல்ல

பொத்தி பொத்தி நெஞ்சில் என் காதல் நானும் வைத்தேன்
பந்தைப் போல மேலே அது துள்ளும் போது தைத்தேன்
கண்ணில் காதலோடு நீ கேட்கும் போது வீழ்ந்தேன்
வெற்று வார்த்தை இல்லை உன் கையில் என்னைத் தந்தேன்
வேறு என்ன வேண்டும் என்று உன்னை நானும் கேட்கிறேன்
காதல் மட்டும் போதும் என்று என்னை நீயும் பார்க்கிறாய்

நீ கேட்டு நான் தந்தால் அது காதல் என்பதா
சொல்லாமலே என் உள்ளத்தை நீ வந்து கொள்ளை அடி

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை
பார்க்கும் நேரம் எல்லாம்
உள்ளம் பேச நினைத்தாலும்
அங்கு வார்த்தை வருவதில்லை
அது போலவே என் காதலும்
சொல்லாமல் வாழ்ந்திடுமே

நெனைப்புல எனக்கு - கருங்குயில் குன்றம்

பாடல்: நெனைப்புல எனக்கு
திரைப்படம்: கருங்குயில் குன்றம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு
சிலுசிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

படகோட்டும் ராசாவே காதல் நெஞ்சை கரையேத்து
பனி தூங்கும் ரோசாவை கையில் ஏந்தி காப்பாத்து
வாடும் வேரில் நீர் ஊத்து வெளக்கு திரியில் நெய் ஊத்து
போகும் பாதை நீ மாத்து புதிய வெளிச்சம் வரப்பாத்து
நாள்தோறும் போராட உன் பாட்டை நான் பாட

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

பல பேர்க்கு நோய் தீர்க்கும் பாவை நெஞ்சு நோயாச்சு
மன நோயை தீர்த்து வைக்கும் டாக்டர் இங்கு நீயாச்சு
பார்க்கும் பார்வை மருந்தாகும் பசியைத்தீர்க்கும் விருந்தாகும்
தாக்கும் ஏக்கம் தணியாதா தேனும் பாலும் இணையாதா
நான் வாழ நீ வேணும் நீ வாழ நான் வேணும்

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு
சிலுசிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

Wednesday, May 1, 2013

உருகுதே மருகுதே - வெயில்

பாடல்: உருகுதே மருகுதே
திரைப்படம்: வெயில்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன் & ஷ்ரேயா கோஷல்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஹே உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே

ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
என் கறுத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பார்க்குறேன்
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகிறேன்
ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழ்கிறேன்
கூரைப்பட்டு சேலைதான் வாங்கச்சொல்லி கேக்குறேன்
கூடுவிட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மை இட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா