Thursday, May 2, 2013

நெஞ்சில் நினைப்பது எல்லாம் - அழகன் அழகி

பாடல்: நெஞ்சில் நினைப்பது எல்லாம்
திரைப்படம்: அழகன் அழகி
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & ஸ்வேதா
இசை: கண்ணன்

தட தடவென்று நெஞ்சு துள்ள
பட படவென்று பற்றிக்கொள்ள
மெதுவாய் மனதில் மயக்கம்
விடு விடுவென்று வார்த்தை சொல்ல
தடு தடுவென்று மௌனம் சொல்ல
இருந்தும் இது ஓர் தயக்கம்
துடிக்கிறதே துடிக்கிறதே
விதவிதமாய் நடிக்கிறதே
நெஞ்சம் என்னும் கடலுக்குள்
புயல் வந்து அடிக்கிறதே

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை
பார்க்கும் நேரம் எல்லாம்
உள்ளம் பேச நினைத்தாலும்
அங்கு வார்த்தை வருவதில்லை
அது போலவே என் காதலும்
சொல்லாமல் ஏங்குதடி

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை

பாறை மீது நீயும் சிறு பூவாய் பூத்து நின்றாய்
வேரைப் போல நீயும் தினம் என்னை தாங்கிச் சென்றாய்
தாயைப் போல நீயும் ஒரு சேயாய் பார்த்துக் கொண்டாய்
ஜென்மம் போதும் என்று இரு கண்ணில் ஏந்திச் சென்றாய்
எங்கு வாழும் போதும் பெண்ணெ உன்னை நானும் தாங்குவேன்
தூங்கும் போதும் உந்தன் பிம்பம் கண்ணில் வைத்து தூங்குவேன்

கடிகார முள் போலே நொடி நேரம் பிரியாமல்
உனக்காகவே உயிர் வாழுவேன் உனை நாளும் சுற்றிடுவேன்

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை

தட தடவென்று நெஞ்சு துள்ள
பட படவென்று பற்றிக்கொள்ள

விடு விடுவென்று வார்த்தை சொல்ல
தடு தடுவென்று மௌனம் சொல்ல

பொத்தி பொத்தி நெஞ்சில் என் காதல் நானும் வைத்தேன்
பந்தைப் போல மேலே அது துள்ளும் போது தைத்தேன்
கண்ணில் காதலோடு நீ கேட்கும் போது வீழ்ந்தேன்
வெற்று வார்த்தை இல்லை உன் கையில் என்னைத் தந்தேன்
வேறு என்ன வேண்டும் என்று உன்னை நானும் கேட்கிறேன்
காதல் மட்டும் போதும் என்று என்னை நீயும் பார்க்கிறாய்

நீ கேட்டு நான் தந்தால் அது காதல் என்பதா
சொல்லாமலே என் உள்ளத்தை நீ வந்து கொள்ளை அடி

நெஞ்சில் நினைப்பது எல்லாம்
கண்கள் சொல்வது இல்லை
பார்க்கும் நேரம் எல்லாம்
உள்ளம் பேச நினைத்தாலும்
அங்கு வார்த்தை வருவதில்லை
அது போலவே என் காதலும்
சொல்லாமல் வாழ்ந்திடுமே

No comments: