பாடல்: இருந்தா நல்லா இரு
திரைப்படம்: மேயர் மீனாட்சி
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு
இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு
ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்
இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பழகும் கூட்டம் விலகிப் போயி
தனியே நின்னு வாடாதே
நிலையே தண்ணி போட்ட பின்னும்
நிதானம் மட்டும் மாறாது
நெருப்பு பொட்டி எங்கே வச்சேன்
அதுதான் கொஞ்சம் புரியாது
அடச்சீ...கம்முன்னு கெட
ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்
இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
புண்ணில் பட்ட ஈட்டி ஆகும்
உன்னைத் தொட்ட என் வாழ்வு
சொர்க்கம் பார்க்கப் போகும் போது
நீ பக்கம் வந்து நிக்காதே
வெட்கம் மானம் பார்க்கப் போனா
விஷயம் ஒண்ணும் நிக்காதே
அடச்சீ...கம்முன்னு கெட
ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்
இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு
No comments:
Post a Comment