Wednesday, June 12, 2013

நான் இருக்கும் அந்த நாள் - அழியாத கோலங்கள்

பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழியாத கோலங்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

No comments: