பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
திரைப்படம்: உயிரே
பாடியவர்: உன்னிமேனன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஓ கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் பொன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
No comments:
Post a Comment