Monday, November 4, 2013

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி - புண்ணியம் செய்தவள்

பாடல்: செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
திரைப்படம்: புண்ணியம் செய்தவள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஹே...ஹே...ஆ...ஹா
ஹே...ஹே...லா...ல...லா
ல...லா...ல...லா
ல...லா...லா...ல...லா

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீயென்றே நினைத்தேன்

தென்பொதிகை வரும் தென்றல் எது
தென்பொதிகை வரும் தென்றல் எது
அது நீயென்றே நினைத்தேன்
கண் கவரும் ஒரு செங்கமலம்
கண் கவரும் ஒரு செங்கமலம்
என நான் உன்னை அணைத்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல ஹா
ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல லா

சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ
சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ

மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ

மங்கையொரு குளிர் கங்கையென
தினம் நான் வந்தே குளிப்பேன்
உள்ளவரை எனை அள்ளியெடு
அதில் நான் என்னை மறப்பேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

லா லா லா லா ல ல ல் ல லா
லா லா லா லா ல ல ல் ல லா

லா லா ல லா...லா லா லா
லா லா ல லா...லா லா லா

அங்கொரு தம்பதிகள் ஆயிரம் சங்கதிகள்
சொல்வதைக் கேட்டாயோ கண்ணனே
அன்பெனும் சன்னதியில் மன்னனும் உன் மடியில்
துஞ்சிட வேண்டாமோ கண்மணி
துஞ்சிட வேண்டாமோ கண்மணி

உன் அடிமை இந்தப் பெண் அடிமை
எனை நான் அன்றே கொடுத்தேன்
செவ்விதழோ ஒரு செம்பவளம்
அதில் தேன் அள்ளிக் குடித்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
அதில் நான் உன்னை அழைத்தேன்

No comments: