Saturday, November 2, 2013

உனை நான் அறிவேன் - கோடீஸ்வரன் மகள்

பாடல்: உனை நான் அறிவேன்
திரைப்படம்: கோடீஸ்வரன் மகள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
இசை: சக்ரவர்த்தி


உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ

இது மன்னவன் கோயில் தீபமல்ல
முத்து மாலைகள் சூடிடும் ரூபமல்ல
இந்த சாகசப் பேச்சுக்கள் தேவையில்லை
எந்தன் கோயிலில் வேறொரு பாவையில்லை
மடி வரும் கொடியே நான் தானோ
மணி இதழ் யாவும் தேன் தானோ
சித்திரச்சிலை போல் இடைதான் ஆட
சிறு விழிதான் சரிகம பாட
சரசங்கள் பயிலும் சங்கீதமோ
சகலமும் புரியும் சந்தோஷமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

பசும் புல்வெளி மீதினில் பள்ளி கொள்ள
வரும் பைங்கிளி நீயென அள்ளிக்கொள்ள
திருமேனியில் ஏதோ மெல்ல மெல்ல
ஒரு மின் அலை பாய்வதை என்ன சொல்ல
மறந்தேன் நான் எனை மாலையிலே
மறைத்தேன் மேனியை சேலையிலே
கைதான் காதலில் பூமாலை
மங்கை அறிவாள் கண்ணன் லீலை
எனை கொஞ்சம் நெருங்கு இன்றாவது
இடம் கொஞ்சம் கொடுத்தால் என்னாவது

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

No comments: