Tuesday, October 8, 2013

ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி

பாடல்: ஆசைய காத்துல தூது விட்டு
திரைப்படம்: ஜானி
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா


ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தைமாசம் மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சோ பாடுது சோடிய தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையும் சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

தேனோ பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயிலைத்தோட்டத்து மானு
ஓடிவர உன்னைத் தேடிவர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

No comments: