Tuesday, October 22, 2013

அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

பாடல்: அந்தரங்கம் யாவுமே
திரைப்படம்: ஆயிரம் நிலவே வா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...

காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது எப்பிடி எப்பிடி
கம்பனே வந்தால் கூட கட்டுப்படி ஆகாது எப்பிடி எப்பிடி
கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...ஹா
எப்பிடி...எப்பிடி எப்பிடி எப்பிடி எப்பிடி

காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம் எப்பிடி எப்பிடி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் எப்பிடி எப்பிடி
தாவணிப் பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
நீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

No comments: