Thursday, October 17, 2013

பூவென்பதா பொன் என்பதா - உயிரே உனக்காக

பாடல்: பூவென்பதா பொன் என்பதா
திரைப்படம்: உயிரே உனக்காக
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாகவா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது...னன னன னன னன
னன னன ...னா னா னா னா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது...லல லல லல லல
லல லல...லா லா லா லா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

No comments: