Tuesday, October 8, 2013

முத்து ரதமோ முல்லைச் சரமோ - பொன்னகரம்

பாடல்: முத்து ரதமோ முல்லைச் சரமோ
திரைப்படம்: பொன்னகரம்
பாடியவர்கள்:பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


முத்து ரதமோ முல்லைச் சரமோ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ
இரவுக்காலம் நிலவுக்கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத்தேரில் உரிமைப்போரில்
என்னை இழுக்காதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு

வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினம் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

No comments: