Wednesday, October 9, 2013

என் அன்பே அன்பே - உன்னைத்தேடி வருவேன்

பாடல்: என் அன்பே அன்பே
திரைப்படம்: உன்னைத்தேடி வருவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே
உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்
தினமும் காதல்கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்
காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண
சந்திரோதயம் நீ ஆக சொர்க்காலயம் நான் காண
கண்ணா உன் கைவண்ணம் காணாத வைபோகம்
அன்பே உன் சிங்காரம் அழகான ஶ்ரீராகம்

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது
வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்
உன் மேலொரு கண்ணாக உன்னோடு நான் ஒண்ணாக
என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு
மெதுவாகத் தொட்டாலும் பதமாகப் பட்டாலும்
புதுமேனி நோகாதோ புண்ணாகிப் போகாதோ

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

No comments: