Wednesday, October 9, 2013

தேடும் கண்பார்வை - மெல்லத் திறந்தது கதவு

பாடல்: தேடும் கண்பார்வை
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயம் ஆனதோ

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசைக் காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
கனிவாய்...மலரே
உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமும் உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்...இணைவோம்
இனி நீயும் நானும் வாழவேண்டும் வாசல் தேடிவா

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயம் ஆகுமோ
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

No comments: