Thursday, October 31, 2013

விடுகதை ஒன்று - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடல்: விடுகதை ஒன்று
திரைப்படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.என்.சுரேந்தர் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


ஆரிராரிரோ...ஆரிராரிராரோ...ஆரிராரிராரோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யாரென்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளங்காற்றே மடல் வாழைக்கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்ததே உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் பாவம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆரிரோ...ஆராரோ ஆரிராரோ...ஆரிராரிரோ

No comments: