Tuesday, January 22, 2013

சரணம் சரவணனே - அவள் சுமங்கலிதான்

பாடல்: சரணம் சரவணனே
திரைப்படம்: அவள் சுமங்கலிதான்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக
தமிழினம் காத்திடும் தூயவா
விழியாக மொழியாக மதியாக நிதியாக
காத்தருள் கார்த்திகை பாலகா

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற

அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்
எந்நாளும் உன் இரு திருவடி நிழலில்
பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ

இவளது பேரின்பம் கதி நீ என
நான் உனை அனுதினம் வலம் வர

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்
பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்

செந்தூர குங்கும கோலத்தில் திகழ
திருமண வேளையும் வர வேண்டும்
ஷண்முக வடிவேலா வரும் மருமகன்
உறவினில் மகன் என விளங்கிட

ஷண்முக வடிவேலா வரும் மருமகன்
உறவினில் மகன் என விளங்கிட

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

No comments: