பாடல்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது
திரைப்படம்: மேள தாளங்கள்
இசை: ரமேஷ் நாயுடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
திரைப்படம்: மேள தாளங்கள்
இசை: ரமேஷ் நாயுடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே...ஹே
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே
அஹா...ஹா ஆஹா...அஹா...ஹா
லலா...லா லாலா...லல...லா
நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு...ஆஆ
நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு
மதனனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ
சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே
அஹா...ஹா ஆஹா...அஹா...ஹா
ஒஹோ...ஹோ லாலா...லல...லா
இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே...ஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே
புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே
அஹா...ஹா லாலா...லல...லா
லலா...லா ஆஹா...அஹா...ஹா
லலா...லா ஆஹா...அஹா...ஹா
அஹா...ஹா லாலா...லல...லா
No comments:
Post a Comment