Monday, October 8, 2012

கோடைகால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்

பாடல்: கோடைகால காற்றே
திரைப்படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
தன் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்

இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
வெண்மலை அருவி பன்னீர் தூவி
பொன்மலை அழகின் சுகம் ஏற்றாதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்

இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

No comments: