Monday, October 8, 2012

நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சீமிட்டுகிறது

பாடல்: நல்ல மனம் வாழ்க
திரைப்படம்: ஒரு ஊதாப்பூ கண் சீமிட்டுகிறது
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்


நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

பூவுலகின் லட்சியங்கள் பூபோன்றே வாடும்
பூவுலகின் லட்சியங்கள் பூபோன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்
மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்கவேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

No comments: