Friday, October 31, 2008

anuraagamE undhan iLandhEgamE - kiLippiLLai

பாடல்: அனுராகமே உந்தன் இளந்தேகமே
திரைப்படம்: கிளிப்பிள்ளை
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

அனுராகமே உந்தன் இளந்தேகமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

பாரிஜாத பூவை சூடி தேவலோக தேரிலேறி
மாலைசூட வரும் நேரம்...பாவை மேனி அரங்கேறும்
கண்ணோடு கண்ணாகி நெஞ்சோடு ஒன்றாகி
பாடும் காதல் ராகம் வாழ்வில் சேர்க்கும் இன்பமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

பூவில்லாத சோலையாக நீரில்லாத பாலையாக
வாடும் ராமனது சீதை...கீதை கண்ணனது ராதை
மண்கூட உன்னாலே பொன்னாகும் பூவாகும்
பூவைப்போல பாவை நாளை தேனை சிந்துமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=29971&br=high&id=5596&songname=45-Anu-Raagamae&page=movies

No comments: