Wednesday, October 29, 2008

raagam thaaLam - kizhakkE oru kaadhalpAttu

பாடல்: ராகம் தாளம்
திரைப்படம்: கிழக்கே ஒரு காதல்பாட்டு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்கமேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய்யில்லை
பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை
கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்
மரம்மீது பறவை ஆவோமா
சிறகோடு வானம் போவோமா
நீலவானில் காதல் பாடி
நிலவைத் தேடி போவோம்
கோடைக்காலம் போன பின்பு
மீண்டும் மண்ணில் சேர்வோம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

காதலென்னும் ஓர் புதிய பள்ளியில்
உந்தன் மாணவி ஆனேனே
காமன் என்பவன் நமது பள்ளியில்
பாடம் கேட்கிறான் பெண்மானே
நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் தூவிடும் பெண்மையென்ற சாலை
நான் என்ற வார்த்தை முடியட்டுமே
நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே
மாரிக்காலம் போன பின்பு பூமி எண்ணும் பூக்கள்
எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்கமேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ஆ...ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

No comments: