Saturday, October 27, 2012

கோவில் மணி ஓசைதன்னை - கிழக்கே போகும் ரயில்

பாடல்: கோவில் மணி ஓசைதன்னை
திரைப்படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி...பாஞ்சாலி

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி...பரஞ்சோதி

கோவில் மணி ஓசைதன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ பிஞ்சுப்பூவோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ

கோவில் மணி ஓசைதன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்னச்சின்ன முல்லை கிளிப்பிள்ளை
என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும்வரை பாடு தாளம் போடு
அதை நீயே கேளு

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு
நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ...பாடுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

2 comments:

Madhu said...

Nice song priyaka... :D

lyricsbypriya said...

Welcome to my blog Madhu! :)