Wednesday, May 1, 2013

உருகுதே மருகுதே - வெயில்

பாடல்: உருகுதே மருகுதே
திரைப்படம்: வெயில்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன் & ஷ்ரேயா கோஷல்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஹே உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே

ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
என் கறுத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பார்க்குறேன்
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகிறேன்
ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழ்கிறேன்
கூரைப்பட்டு சேலைதான் வாங்கச்சொல்லி கேக்குறேன்
கூடுவிட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மை இட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா







1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உருக வைக்கும் பாடல் தான்...