Wednesday, September 18, 2013

தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி ரட்சத்திரம்

பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே...
ஆஆ ஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலையென்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

No comments: