Saturday, September 28, 2013

ராகம் தாளம் பாவம் பாடல் - காதோடுதான் நான் பேசுவேன்

பாடல்: ராகம் தாளம் பாவம் பாடல்
திரைப்படம்: காதோடுதான் நான் பேசுவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே

வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
என் வாழ்வில் உறவாடக் கண்டேன்
நீ பேசும் மொழி கூட வீணை
நீதானே அறிவாய் பெண்மானை

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே

யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
நான் அறியாத கலைதானே கண்ணா
காற்றோடு இணைகின்ற ராகம்
கையோடு இணைகின்ற தேகம்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்

No comments: