Thursday, September 19, 2013

தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது

பாடல்: தலையைக் குனியும் தாமரையே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி
இசை: இளையராஜா


தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஆ ஆஆ ஆ ஆஆஆ ஆஆஆ ஆ
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

காத்திருந்தேன் அன்பே
இனி காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா
பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்
வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையாம்...இது சரியா
சரி சரி பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ

பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

No comments: