Monday, September 28, 2009

konjum malar manjam - janani

பாடல்: கொஞ்சும் மலர் மஞ்சம்
திரைப்படம்: ஜனனி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
உன் மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்

நான் ஆட எந்தன் மணிச்சதங்கை ஆடும்
நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா
வானூரும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்
ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும்
நாள்தோறும் என்மேல் மலர்ச்சிறகை மூடும்
தழுவிடும் நழுவிடும் அது தரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும் பால் மழையதில் பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும் வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா...அந்த நாள் தேடி நான் வாடவா

பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் இன்புறவே
நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன்

தீயாக உடல் கொதிப்பெழுந்து நோகும்
நான் உனை தழுவிடும் நாள்வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில் வேள்விகள் துவங்கிடும்
பால் அருவியில் குளித்திட நான் தினம் உனை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட நான் ஒரு கணம் சிலிர்த்திட
தேனூற்று நீராட்டுது...நம்மை பூங்காற்று தாலாட்டுது

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
அதை தாராயோ நான் இன்புறவே
அதை தாராயோ நான் இன்புறவே

No comments: