Monday, September 28, 2009

thalaivi thalaivi - mogana punnagai

பாடல்: தலைவி தலைவி
திரைப்படம்: மோகனப்புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி

விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த
பின்னும் ஏனிந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த
பின்னும் ஏனிந்த சந்தேகமோ
இது பெண்ணோடு உண்டானது
அது கூடாது பொல்லாதது

தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க
கண்டு யாரென்று கேட்டாரய்யா
ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க
கண்டு யாரென்று கேட்டாரய்யா
அது நானென்று யார் சொன்னது
அதை நானன்றி யார் சொல்வது

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி தலைவன்
தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

No comments: