பாடல்: எத்தனை வருஷம்
திரைப்படம்: ஜாம்பவான்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & ஜனனி பரத்வாஜ்
எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்
அத்தனை ஆசையும் பத்தரை நொடியில்
மொத்தமாய் தீர துள்ளிக் குதிச்சேன்
உச்சந்தலையில் வானம் முட்டுதே
ஓ உன்னாலே...உன்னாலே
இமைகளை மூடாமல் நீ கனவுகள் காணாதே
இருளுக்குள் நீயும் நின்று நிழலினைத் தேடாதே
கற்பனை ஆற்றில் நீந்தாதே
உன் கண்களில் என்னை ஏந்தாதே
கானல் நீரை அள்ள முடியுமா
ஓ சொல்லம்மா...செல்லம்மா
காதல் வந்தாலே கண்கள் தூங்காது
கனவின் பிடியில் அலைபாயும்
தூக்கம் போனாலே காதல் ஆகாது
மனதை துடைத்தால் சுகம் ஆகும்
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி
சொல்லிட உதடுகள் துடிக்கிறதா
உனக்குள் உண்மையில் நான் இருந்தால்
அதற்கொரு சாட்சியம் இருக்கிறதா
இதயத்தைக் கேட்டு உன் முகம் காட்ட
அனுமான் போல நான் இல்லையே
ஓ அன்பே வா...அன்பே வா
எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்
என்னை பார்க்காதே கண்ணை சாய்க்காதே
எனது மனது உனக்கெதற்கு
உன்னை நேசிக்க உயிரில் பூசிக்க
உனது சம்மதம் எனக்கெதற்கு
உன் விரல் என் உடல் தொடும் நேரம்
உணர்வினில் ஒருவித தடுமாற்றம்
இதுதான் காதலின் அடையாளம்
இன்னும் இன்னும் இருக்குது பல மாற்றம்
கரு விழிக்காதல் முகவரி ஆக
நெஞ்சம் உந்தன் தஞ்சம் ஆனதே
ஓ அன்பே வா...அன்பே வா
எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்
அத்தனை ஆசையும் பத்தரை நொடியில்
மொத்தமாய் தீர துள்ளிக் குதிச்சேன்
உச்சந்தலையில் வானம் முட்டுதே
ஓ உன்னாலே...உன்னாலே
இமைகளை மூடாமல் நீ கனவுகள் காணாதே
இருளுக்குள் நீயும் நின்று நிழலினைத் தேடாதே
கற்பனை ஆற்றில் நீந்தாதே
உன் கண்களில் என்னை ஏந்தாதே
கானல் நீரை அள்ள முடியுமா
ஓ சொல்லம்மா...செல்லம்மா
No comments:
Post a Comment