Friday, April 12, 2013

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு

பாடல்: மேகத்தில் ஒன்றாய் நின்றோமே
திரைப்படம்: காதல் சடுகுடு
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன் & சுஜாதா

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவர் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்ட உன் மென்மையை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்
வெளியூர் போகும் காற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பிவரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம் நிச்சயம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உனை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் எரிந்திருப்பேன்
உன்னை எண்ணி என் உயிர்த்தளம் உடைந்திருப்பேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த்தரிப்பேன்

அன்பே அன்பே உனை எங்ஙனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணையிருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பிவைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன்தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவர் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

No comments: